கனவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும்
கவிதைகள் ஆயிரம் கனவுகளை சொல்லும்
கலங்கிய நீரோடை நினைவுகளுடன்
அம் மனை வீதி வழியே
நாட்கள் பல கழிந்து ..........
அமர்ந்து அலட்டிய சுவர்க்கரைகள்
ஆளில்லாமல் இன்று தனிமையிலே
எத்தனை நாட்களை கடந்திருப்போம்
அம்மாவின் திட்டுப் பேச்சுகளுடன் அதன்மீது
நாட்கள் ஆயிரம் கடந்து போனாலும்
நினைவுகள் காலவதியின்றி நெஞ்சோரத்தில்
குட்டிக் கதைகள் பேசிய
குட்டிச்சுவர் மீது அன்று
எழுதி வைத்த கிறுக்கல்கள் மட்டும்
இன்று ஏனோ பொக்கிஷங்களாய்
தொட்டுப் பார்க்கிறேன் மெல்ல......
வெளியே போகிறேன் என்றேன்
"ஏழு கழுதை வயசாய்ப் போச்சு
இன்னுமா போகிறாய் ஊர் மேய"
என் அம்மாவின் அதட்டல் குரல்
சமையலறை வாசல் வழியே
"உன் போன்ற பெடியங்கள் இன்று
ஆயிரமாயிரமாய் கை மேலே
உனக்கு மட்டும் இங்கே தண்டமாய்"
மேலும் ஒரு குரல் காதில் விழ
சட்டை செய்யாமல்
சட்டையை மாட்டிக் கொண்டு
வெளியே போன போது
"உன் வீட்டிலுமாடா இப்படி"
என்றான் ஒரு நண்பன்
நிம்மதியுடன் மனம்
அன்று சிறகடித்த நினைவுகள்
இன்று என் மனதின் ஓரம்
அனல் காற்றாய்
எத்தனை காலைகள்
எத்தனை மாலைகள்
கட்டாம் தரை சாலைகளிலும்
கடற்கரை ஓரங்களிலும்
காரணமின்றி ஒரே பாதை வழியே
தேய்ந்து போன பாதணிகள்
இன்றும் அந்த கதைகள் சொல்லும்
மீண்டும்
அம்மனை வீதி வழியே
நினைவுகளில் மூழ்கிய போது
"யாரப்பா அங்கே "
எங்கேயோ கேட்ட குரல்
கனவுகளை மீண்டும் நிஜமாக்க
ஒலி வழி நோக்கி புன்னகையுடன்
குட்டி சுவர் மறுபடியும்
எனை பார்த்து சிரிக்கிறது .............
இப்படிக்கு
அன்புடன்......... Prakhash
பெண்ணவள் குடையாய் இன்று
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய
நான் மணக் கோலத்தில் தேடிய
பெண்ணவள் மனைவியாய் இன்று
எங்கோ தெருவில்.....
எத்தனை மாற்றங்கள்
எத்தனை மாற்றங்கள்
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே
அத்தனையும் கண்முன்னே
தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத
தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................
மாசி மாத தென்றல் காற்று
மார்கழி குளிரோடு மார்பில் பட
பூ இதழ்களோடு காதல் உரைக்க
மொட்டை மாடி வாயிலிலே
காடாய் கிடந்த கடற்கரை நோக்கியபடி
காத்திருக்கிறேன்
அழகிய கடற்கரையில் ஆங்கங்கே
அழுக்காக்கி கொண்டிருக்கும் தெருநாய்கள்
நிசப்தமான வீதிகளில்
ஓசை இன்றி சில மனிதர்கள்
என்ன ஆயிற்று இன்று.....
காலையும் ஓடிக்கொண்டிருக்கிறது
கடற்கரையில் காதலர்களை காணோமே
"சுனாமி" என்று உரைத்த போதும்
தான் நிலம் மறக்கத் தவிர்த்தவர்கள்
இன்று மட்டும் இருப்பிடம் மறந்ததேன்
"அன்றொரு திங்களில்
இன்று போலொரு நாளில் தான்
என் நாடும் விடிந்ததாம்"
அங்கே ஒரு கிழவன் பிதற்றியபடி
கொஞ்சம் பெருமிதத்துடன்
வேறு வெட்டி வேலை இல்லை
அவனருகில் சென்றேன்
"இன்று தானடா தம்பி
புன்னகையுடன் அவன் முகம்
"அப்படியா தாத்தா
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
அதை வாங்குவதற்காக"
அறியாச் சிறுவனில்லை
ஆனபோதிலும் கேட்டு விட்டேன்
அவன் முகம் வெம்பியதையும்
காண நான் தவறவில்லை
இப்படி ஒரு நாளா
கண்ணுக்கு கூட ஒன்றும்
காதல் தரவில்லையே
கவலையுடன் திரும்புகிறேன்
வீதி ஓரத்தில் இன்னொருவன்
அவனும் பிதற்றுகிறான்..........





