வரம் கேட்டு ரதிகள் ஆயிரமாய்ப் போகிறார்கள்
தரைபார்த்து ராமர்களும் தெவிட்டாமல் போகிறார்கள்
இத்தனை மத்தியில் நானும் நுழைந்திட்டேன்
பல்கலை கனவுகள் பலமாய் உறவாட....

கனாக்காணும் காலங்களில் கனவுகள் வடித்தவன்
உலாப்போன வீதிகளில் அன்று கதைகளைத் தேடினேன்
ஓ.... இலங்கைப் பல்கலை போலும்
இப்படித்தான் உரு மாற்றங்களோ

இரண்டிரண்டாய் கோர்த்துவிட்டார்கள் - அடடா
என்னமா சேர்க்கிறார்கள் இங்கேயே
ஒற்றுமையைப் பலப்படுத்தும் வித்தை தெரிந்தவர்கள்

வாழை இல்லை மீது ஏதோ ஒன்று வெண்மையாய்
தமிழாக்கம் கேட்டேன் வெண்சோறு என்றார்கள்
ஓ... அதுதான் இதுவா
முன்னால் போன என் நண்பனுக்கு அழகாய் சிங்கள பெண்ணொருத்தி
ஜோடியாய் உணவருந்த... பொருமியது மனம்..
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது....

சற்று நேரம் கழிந்த பின்னே
அங்கே ஊர் பெரிய அரங்கம்
முன்வரிசையில் நாங்கள் சிலர்
பேசிய பாஷைகள் தாலாட்டாய் மாறவும்
தூங்காமல் அவதிப்பட்ட முதல் நாள்
ஈற்றிலே ஒரு குரல் என் மொழியிலும்- என்செய்ய
பாதியுறக்கத்தில் பார்த்திருக்க மறந்துவிட்டேன்

இரவுகள் கடந்தபின் ஒருநாள் மாலை
கைகள் காற்றாடியாக பழைய உடட்பயிர்ச்சி கூடத்திலே
"விழித்திரு" என்றுவிட்டு ஏனோ கழுத்தறுத்தார்கள்
இருதடவைகள் பரீட்சை துன்பம் இதற்காகவோ
ஈற்றிலே வந்த ஊலலல்லா கூட
முழுசாய் கேட்பதற்குள் முடங்கிவிட்டது

வகுப்பறை வாசகம் மட்டும் என்ன சொல்ல
ஆங்கில மாமிகள் அழகாய்ப் பேசுகிறார்கள்
அனுதினம் ரசிப்பதக்குத்தான் எனக்கு மனமில்லை
விருந்தினராய் இருந்திருந்து எட்டிப்பார்ப்பேன்
அடிக்கடி ஆசிரியை என்னைப் புதிதாய் பார்க்கிறாள்

கல்லூரிக் கடந்தவை கதைத்து முடித்துட்டேன்
சிரிப்பிலே சிலதருணம் சோகமும் கலந்துவரும்
ஆயிரம் சந்தர்ப்பங்கள் என் சகோதர நண்பனுக்காய்
மறுதலிக்க முடியாத உண்மைகள் அவை
போகட்டும் என்செய்ய.....
கல்லூரிக்கதை எழுதிய இக் கவிசரி
முற்றிலுமாய் என் தமிழ் பேசட்டும் ......

கனவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும் 

கவிதைகள் ஆயிரம் கனவுகளை சொல்லும் 
கவிதைகளும் கதைகளுமே ஆன உலகத்தில் 
கலங்கிய நீரோடை நினைவுகளுடன் 
அம் மனை வீதி வழியே 
நாட்கள் பல கழிந்து ..........

அமர்ந்து அலட்டிய சுவர்க்கரைகள் 
ஆளில்லாமல் இன்று தனிமையிலே 
எத்தனை நாட்களை கடந்திருப்போம் 
அம்மாவின் திட்டுப் பேச்சுகளுடன் அதன்மீது 
நாட்கள் ஆயிரம் கடந்து போனாலும் 
நினைவுகள் காலவதியின்றி நெஞ்சோரத்தில் 

குட்டிக் கதைகள் பேசிய
குட்டிச்சுவர் மீது அன்று 
எழுதி வைத்த கிறுக்கல்கள் மட்டும் 
இன்று ஏனோ பொக்கிஷங்களாய் 
தொட்டுப் பார்க்கிறேன் மெல்ல......

வெளியே போகிறேன் என்றேன் 
"ஏழு கழுதை வயசாய்ப் போச்சு 
இன்னுமா போகிறாய் ஊர் மேய"
என் அம்மாவின் அதட்டல் குரல் 
சமையலறை வாசல் வழியே

"உன் போன்ற பெடியங்கள் இன்று 
ஆயிரமாயிரமாய் கை மேலே 
உனக்கு மட்டும் இங்கே தண்டமாய்"
மேலும் ஒரு குரல் காதில் விழ 

சட்டை செய்யாமல் 
சட்டையை மாட்டிக் கொண்டு 
வெளியே போன போது 
"உன் வீட்டிலுமாடா இப்படி"
என்றான் ஒரு நண்பன் 
நிம்மதியுடன்  மனம் 
அன்று சிறகடித்த நினைவுகள்
இன்று என் மனதின் ஓரம்
அனல் காற்றாய்

எத்தனை காலைகள்
எத்தனை மாலைகள் 
கட்டாம் தரை சாலைகளிலும் 
கடற்கரை ஓரங்களிலும் 
காரணமின்றி ஒரே பாதை வழியே 
தேய்ந்து போன பாதணிகள் 
இன்றும் அந்த கதைகள் சொல்லும் 

மீண்டும் 
அம்மனை வீதி வழியே 
நினைவுகளில் மூழ்கிய போது 
"யாரப்பா அங்கே "
எங்கேயோ கேட்ட குரல் 
கனவுகளை மீண்டும் நிஜமாக்க 
ஒலி வழி நோக்கி புன்னகையுடன் 
குட்டி சுவர் மறுபடியும் 
எனை பார்த்து சிரிக்கிறது .............

                             இப்படிக்கு 
                                 அன்புடன்......... Prakhash 


நான் மழை காலத்தில் தேடிய 
பெண்ணவள் குடையாய் இன்று 
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய
பெண்ணவள் மனைவியாய் இன்று 
எங்கோ தெருவில்.....
எத்தனை மாற்றங்கள் 
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே
தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத 
தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................


இப்படிக்கு ப்ரியமுடன்
Prakhash...........



மாசி மாத தென்றல் காற்று 
மார்கழி குளிரோடு மார்பில் பட
படிந்து கிடந்த வெண் பனித்துளிகள்
பூ இதழ்களோடு காதல் உரைக்க 
மொட்டை மாடி வாயிலிலே 
காடாய் கிடந்த கடற்கரை நோக்கியபடி 
காத்திருக்கிறேன்

அழகிய கடற்கரையில் ஆங்கங்கே
அழுக்காக்கி கொண்டிருக்கும் தெருநாய்கள்
நிசப்தமான வீதிகளில் 
ஓசை இன்றி சில மனிதர்கள்
என்ன ஆயிற்று இன்று.....

காலையும் ஓடிக்கொண்டிருக்கிறது
கடற்கரையில் காதலர்களை காணோமே
"சுனாமி" என்று உரைத்த போதும்
 தான் நிலம் மறக்கத் தவிர்த்தவர்கள்
இன்று மட்டும் இருப்பிடம் மறந்ததேன்


"அன்றொரு திங்களில் 
இன்று போலொரு நாளில் தான் 
என் நாடும் விடிந்ததாம்"
அங்கே ஒரு கிழவன் பிதற்றியபடி
கொஞ்சம் பெருமிதத்துடன்  
வேறு வெட்டி வேலை இல்லை 
அவனருகில் சென்றேன் 
என்னவென்று விடுப்பறிய

"இன்று தானடா தம்பி 
இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் "
புன்னகையுடன் அவன் முகம் 
"அப்படியா தாத்தா
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
அதை வாங்குவதற்காக"
அறியாச் சிறுவனில்லை 
ஆனபோதிலும் கேட்டு விட்டேன் 
அவன் முகம் வெம்பியதையும் 
காண நான் தவறவில்லை 

இப்படி ஒரு நாளா
கண்ணுக்கு கூட ஒன்றும் 
காதல் தரவில்லையே 
கவலையுடன் திரும்புகிறேன் 
வீதி ஓரத்தில் இன்னொருவன்
அவனும் பிதற்றுகிறான்..........

About this blog

Followers

Powered by Blogger.